×

பெண் காயம் விராலிமலையில் மதுபாட்டில் விற்றவர் கைது

விராலிமலை, பிப். 11: விராலிமலையில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். விராலிமலை பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதையடுத்து கீரனூர் சாலை பகுதிகளில் விராலிமலை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விராலிமலை சுடுகாடு அருகே கலிங்கிப்பட்டியை சேர்ந்த மணி (43) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து மணியை கைது செய்து அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை அருகே திருவரங்குளம்...